பங்களாதேஷுக்கு வெற்றி – அரையிறுதி வாய்ப்பை தவறவிட்டது சிம்பாப்வே!

Sunday, October 30th, 2022

இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில், (குழு 2) சிம்பாப்வே அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் பங்களாதேஷ் அணி 3 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பாடிய பங்களாதேஷ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட் இழப்புக்கு 150 ஓட்டங்களைப் பெற்றது.

அணிசார்பில் நஜ்முல் ஹுசைன் ஷன்டோர் 71 ஓட்டங்களை அதிகப்படியாக பெற்றார். பந்து வீச்சில் சிம்பாப்வே அணியின் ரிச்சர்ட் ந்கராவா மற்றும் ப்ளெஸிங் முஸரப்பானி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இந்த நிலையில், 151 ஓட்டங்கள் என்ற இலக்கை நோக்கி பதிலளித்தாடிய சிம்பாப்வே அணி, 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட் இழப்புக்கு 147 ஓட்டங்களை பெற்று, வெற்றியின் விளிம்புக்கு வந்து தோல்வியை சந்தித்தது. அதற்கமைய, பங்களாதேஷ் அணி 3 ஓட்டங்களில் வெற்றியை தழுவியது.

துடுப்பாட்டத்தில் சிம்பாப்வே அணிசார்பில், சீன் வில்லியம்ஸன் 64 ஓட்டங்களை அதிகப்படியாகப் பெற்றார்.

பந்து வீச்சில் பங்களாதேஷ் அணியின் தஸ்கின் அஹமட் 3 விக்கெட்டுகளையும், மொஸாதிக் ஹுசைன் மற்றும் முஸ்தபிசூர் ரஹ்மான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இதேவேளை, சுப்பர் 12 சுற்றில் இதுவரையில், பங்களாதேஷ் அணி 3 போட்டிகளில் விளையாடி, இரண்டில் வெற்றி பெற்றுள்ளதுடன், ஒரு தோல்வியை சந்தித்துள்ளது.

அதன்படி, குழு 2 இற்கான புள்ளிப்பட்டியலில் இந்தியாவுக்கு அடுத்தபடியாக பங்களாதேஷ் அணி 2 ஆவது இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: