நல்லூர்ப்பிரதேச செயலக விளையாட்டுப் போட்டி – நாயன்மார்க்கட்டு பாரதி அணி சம்பியன்!

Friday, February 2nd, 2018

நல்லூர்ப் பிரதேச செயலக விளையாட்டுப் போட்டியின் கரப்பந்தாட்ட போட்டியில் நாயன்மார்கட்டு அணி 3:2 என்று செற்களை வென்று சம்பியனானது.

நல்லூர் பிரதேச செயலகத்தில் பதிவு செய்யப்பட்ட விளையாட்டுக்கழகங்களுக்கிடையிலான விளையாட்டுப் போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றது.

இதில் ஆண்களுக்கான கரப்பந்தாட்டப் போட்டிகள் 28 ஆம் திகதி அரியாலை சரஸ்வதி விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெற்றது.

இறுதிப் போட்டியில் கோண்டாவில் கவி அணியை எதிர்த்து நாயன்மார்கட்டு பாரதி விளையாட்டுக்கழகம் மோதியது.

முதற் செற்றில் நாயன்மார்கட்டு அணி, 25:22 என்று முன்னிலை பெற்றது. இரண்டாவது செற்றில் கோண்டாவில் கவி அணி, 26:24 என முன்னிலை பெற்றது.

எனினும், விடாது ஆடிய நாயன்மார்கட்டு அணி, மூன்றாவது செற்றில் 25:22 என முன்னிலை பெற்றது.

ஈடுகொடுத்தாடிய கோண்டாவில் அணி, நான்காவது செற்றில் 25:22 என முன்னிலை பெற்றது. தீர்க்கமானதும் இறுதியுமான செற்றை நாயன்மார்கட்டு அணி, 15:10 என முன்னிலை பெற்று, 3:2 என்ற செற்கள் அடிப்படையில் வென்று சம்பியனாகியது.

Related posts: