நம்பிக்கை இல்லாமல் இருந்தேன் -ஷகிப் நெகிழ்ச்சி
Friday, September 1st, 2017அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று, வங்கதேச அணி வரலாற்று சாதனை படைத்தது.
இந்த வெற்றியை வங்கதேச வீரர்கள் மகிழ்ச்சியாக கொண்டாடி வருகின்றனர்.இதே ஆக்ரோசம் 2-வது டெஸ்ட் போட்டியில் தொடரும் என்றும், அப்போட்டியையும் வென்று தொடரை கைப்பற்றுவோம் என வங்கதேச அணியின் தலைவர் ரஹீம் தெரிவித்திருந்தார்
இந்நிலையில் இப்போட்டியில் வங்கதேச அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக விளங்கிய ஷகிப் அல் ஹசன் கூறுகையில், நாங்கள் போட்டியில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை இல்லாமல் இருந்தேன், அப்போது தனது மனைவி ஷகிப், நீங்கள் நாளை வங்கதேசத்தை வெற்றி பெறச் செய்வீர்கள் என்று கூறினார். என் மீது நம்பிக்கை வைத்த என் மனைவிக்கு நன்றி என நெகிழ்ச்சியாக கூறியுள்ளார்.
Related posts:
முரளிதரனுக்கு பிறகு வெளிச்சத்துக்கு வந்த ஹெரத்!
கட்டார் தொடர்பிலான செய்தி போலியானது!
2019 உலகக் கிண்ணம் - IPL ஐ புறக்கணிக்கிறார் மலிங்க?
|
|