தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி:  தொடரை வெற்றது இலங்கை!

Thursday, January 26th, 2017

தென்னாபிரிக்க அணிக்கு எதிரான இறுதி இருபது 20 போட்டியில் சீக்குகே பிரசன்னவின் அதிரடியால் வெற்றி பெற்ற இலங்கை அணி தென்னாபிரிக்க அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட இருபது20 தொடரையும் கைப்பற்றியது.

நேற்றையதினம் கேப்டவுனில் இடம்பெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 169 ஓட்டங்களை  பெற்றது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 19.5 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 170 ஓட்டங்களை பெற்று வெற்றி பெற்றது.

நிதானமாக துடுப்பெடுத்தாடிய நிரோசன் டிக்வெல 68 ஓட்டங்களையும் அதிரடியாக துப்பெடுத்தாடிய சீக்குகே பிரசன்ன 37 ஓட்டங்களையும் பெற்று அணியின் வெற்றியை உறுதி செய்தனர்

258351.3

Related posts: