தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி: தொடரை வெற்றது இலங்கை!
Thursday, January 26th, 2017
தென்னாபிரிக்க அணிக்கு எதிரான இறுதி இருபது 20 போட்டியில் சீக்குகே பிரசன்னவின் அதிரடியால் வெற்றி பெற்ற இலங்கை அணி தென்னாபிரிக்க அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட இருபது20 தொடரையும் கைப்பற்றியது.
நேற்றையதினம் கேப்டவுனில் இடம்பெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 169 ஓட்டங்களை பெற்றது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 19.5 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 170 ஓட்டங்களை பெற்று வெற்றி பெற்றது.
நிதானமாக துடுப்பெடுத்தாடிய நிரோசன் டிக்வெல 68 ஓட்டங்களையும் அதிரடியாக துப்பெடுத்தாடிய சீக்குகே பிரசன்ன 37 ஓட்டங்களையும் பெற்று அணியின் வெற்றியை உறுதி செய்தனர்
Related posts:
ஐபிஎல்லில் சாதிக்கும் முத்தையா சன் ரைசர்ஸ் ஹைதராபாத் !
பென் ஸ்டொக்ஸ் நிரபராதி - மீண்டும் அணியில்!
ஹத்துரு சிங்காவை பதவியிலிருந்து விலகுமாறு அறிவிக்க முடிவு - இலங்கை கிரிக்கெட் நிறுவனம்!
|
|