தொடரை வென்றது இந்தியா!

Friday, December 13th, 2019

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட 20க்கு 20 தொடரை 2க்கு 0 என்ற அடிப்படையில் இந்தியா கைப்பற்றியது.

முன்னதாக இடம்பெற்ற 2 போட்டிகளில் 1 க்கு 1 என்ற அடிப்படையில் இரு அணிகளும் சமநிலையில் வெற்றிபெற்றிருந்தன.

இந்த நிலையில் நேற்றிரவு மும்பையில் இடம்பெற்ற இறுதிப் போட்டியில், இந்திய அணி 67 ஓட்டங்களினால் வெற்றிபெற்றது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கட்டுக்களை இழந்து 240 ஓட்டங்களைப் பெற்றது.

இதையடுத்துஇ 241 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலளித்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி, 20 ஓவர்களில் 8 விக்கட்டுக்களை இழந்து 173 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியடைந்தது.

Related posts: