உலகக் கிண்ணம் குரேஷியாவிற்கே சொந்தம் : வலுக்கும் சர்ச்சை!

Wednesday, July 18th, 2018

FIFA 2018 உலக கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியில், பிரான்ஸ் அணிக்கு வழங்கப்பட்ட பெனால்டிகிற்கு எதிராக கருத்துக்கள் வலுப்பெறத் தொடங்கி உள்ளது.

குரேஷியா வீரர் செய்யாத தவறுக்காக பிரான்ஸ் அணிக்கு தவறான வாய்ப்பு அளிக்கப்பட்டு இருக்கிறது என குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. பிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பிரான்ஸ் 4-2 என்ற கணக்கில் குரேஷியாவை வீழ்த்தி பாரிய வெற்றியினை ஈட்டியது.
குரேஷியா செய்த சில சிறிய தவறுகளை கூட பிரான்ஸ் கோலாக மாற்றி சாதித்து காட்டியுள்ளது. ஆனால் உண்மையாகவே குரேஷியா தவறு எதுவும் செய்ததா என்ற சந்தேகம் எழுந்து இருக்கிறது.
ஆரம்பத்தில் குரேஷியா சேம் சைட் கோல் போட்டதால், பிரான்ஸ் முன்னிலை பெற்றது. அதற்கு அடுத்த தவறை மீண்டும் குரேஷியா செய்தது. அதன்படி சரியாக 38ஆவது நிமிடத்தில் குரேஷியாவின் இவான் பெரிசிக் கையில் பந்து பட்டு நழுவிச் சென்றது. இதனால் பிரான்சிற்கு கோல் அடிக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது.
முதல் முறையாக இந்த உலகக் கோப்பை போட்டியில்தான் பிரான்ஸ் VAR- வீடியோ அசிஸ்டண்ட் ரேஃபரி எனப்படும் பார்த்து ஒருவர் தீர்ப்பு அழிப்பது கடைபிடிக்கப்பட்டது. இதற்கு முன்னாள் வீரர்கள், கால்பந்து வல்லுநர்கள் பயன்படுத்தப்பட்டார்கள். இறுதி போட்டியில் கால்பந்து குறித்து அதிக எழுதும், பேசும் முன்னாள் நடிகர் பிடானா VAR நடுவராக செயல்பட்டார்.
இவர்தான், பெரிசிக் கையில் பந்து பட்டு நழுவிச் சென்ற வீடியோவை மீண்டும் மீண்டும் சோதனை செய்தார். பல கட்ட சோதனைக்கு பின்பே, பிரான்சிற்கு கோலடிக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டது. ஆனால் தற்போது இது தவறான முடிவு என்று சர்ச்சை எழுந்துள்ளது. வேண்டுமென்றே அவர் பந்தை பிடிக்கவில்லை, அவரால் செயலாற்ற முடியாத நிலையில் பந்து அவர் கையில்பட்டு இருக்கிறது என்று கூறப்படுகிறது.
குறித்த இந்த சம்பவம் குரேஷியா கால்பந்து ரசிகர்கள் தொடங்கி, அந்நாட்டின் கால்பந்து பயிற்சியாளர் வரை எல்லோரையும் பெரிய அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. ஒரு பெரிய கால்பந்து தொடரின் இறுதி ஆட்டத்தில் இப்படி செய்வது பெரிய தவறு என்று கால்பந்து வல்லுநர்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.

Related posts: