தொடரை முழுமையாக வென்றது இந்தியா !

Thursday, September 7th, 2017

இலங்கைக்கு எதிரான முதலாவதும் இறுதியுமான 20க்கு இருபது போட்டியில் 7 விக்கெட்டுக்களால் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.

கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் இடம்பெற்ற இந்தப் போட்டி, முன்னதாக மழை காரணமாக சிறிது நேரம் தாமதமாகவே ஆரம்பமானது. இதன்படி நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

இதனையடுத்து, களமிறங்கிய இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் ஏழு விக்கெட்டுக்களை இழந்து 170 ஓட்டங்களைப் பெற்றது.

எனவே இந்திய அணிக்கு 171 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
இதற்கமைய, துடுப்பெடுத்தாட ஆரம்பித்த இந்திய அணி, சார்பில் அதன் தலைவர் விராட் கோலி 82 ஓட்டங்களை அதிரடியாக விளாச, அந்த வெற்றிப் பாதையை நோக்கி நகர்ந்தது.  19.2 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை மட்டுமே பறிகொடுத்த இந்தியா 174 ஓட்டங்களைப் பெற்று வெற்றி வாகை சூடியுள்ளது.

Related posts: