தொடரை இழந்தது இலங்கை அணி!

Tuesday, January 8th, 2019

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் கிரிக்கட் போட்டியில் நியூசிலாந்து அணி 115 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத் தடுப்பை தெரிவு செய்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 4 விக்கட் இழப்பிற்கு 364 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

நியூசிலாந்து அணி சார்பில் ரோஸ் டெய்லர் அதிகபட்சமாக 137 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார். ஹென்றி நிக்கோலஸ் ஆட்டமிழக்காது 124 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார். கேன் வில்லியம்சன் 55 ஓட்டங்கள்.

பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் அணித்தலைவர் லசித் மாலிங்க மூன்று விக்கட்டுக்களையும், லக்ஷான் சந்தகென் ஒரு விக்கட்டையும் கைப்பற்றினர்.

அதன்படி , 365 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 41.4 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து249 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

இலங்கை அணி சார்பில் அதிரடியாக துடுப்பெடுத்தாடிய திசர பெரேரா 63 பந்துகளில் 80 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார். நிரோஷன் திக்வெல்ல 46 ஓட்டங்களையும், குசல் ஜனித் பெரேரா 43 ஓட்டங்களையும் மற்றும் தனஞ்சய டி சில்வா 36 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

பந்து வீச்சில் லொக்கி பேர்கசன் 4 விக்கட்டுக்களையும், ஈஷ் சோதி 3 விக்கட்டுக்களையும் வீழ்த்தினர்.

அதன்படி, மூன்று போட்டிகளை கொண்ட இந்த தொடரை 3-0 என்ற கணக்கில் நியூசிலாந்து அணி கைப்பற்றியுள்ளது.

Related posts: