தேசியமட்ட கூடைப்பந்தாட்டத் தொடரில் யாழ். மாவட்ட அணி மீண்டும் சம்பியன்!

Tuesday, June 5th, 2018

30 ஆவது தேசிய இளைஞர் விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட கூடைப்பந்தாட்டத் தொடரில் பெண்கள் பிரிவில மூன்றாவது வருடமாக சம்பியன் கிண்ணத்தை வென்றது யாழ்ப்பாணம் மாவட்ட அணி.

அம்பலாங்கொட பொதுவிளையாட்டு மைதானத்தில் நேற்று இடம்பெற்ற இறுதியாட்டத்தில் யாழ்ப்பாண மாவட்ட அணியை எதிர்த்து கம்பகா மாவட்ட அணி மோதியது.

நான்கு கால்பாதிகளைக் கொண்டதாக ஆட்டம் அமைந்தது. முதலாவது கால்பாதியில் யாழ்ப்பாணம் மாவட்ட அணி 12:08 என்ற புள்ளிகளின் அடிப்படையில் முன்னிலை பெற்றது. இரண்டாவது கால்பாதியில் இரண்டு அணிகளும் தலா 8 புள்ளிகளைப் பெற்றன. முதல் பாதியின் முடிவில் 20:16 என்ற புள்ளிகளின் அடிப்படையில் முன்னிலை வகித்தது யாழ்ப்பாண மாவட்ட அணி.

மூன்றாம் கால் பாதியில் யாழ்ப்பாண மாவட்ட அணி 14:09 என்ற புள்ளிகளின் அடிப்படையில் வெற்றிபெற்றது. நான்காவது கால்பாதியும் 20:06 என்ற புள்ளிகளின் அடிப்படையில் யாழ். மாவட்டத்தின் வசமானது. முடிவில் 54:31 என்ற புள்ளிகளின் அடிப்படையில் வெற்றிபெற்றது யாழ்ப்பாண மாவட்டஅணி.

Related posts: