தீர்மானத்தை கைவிட்டார் மஹெல

Saturday, June 24th, 2017

இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் வீரர் மஹெல ஜெயவர்தன, இங்கிலாந்தின் லங்காஷெயார் பிராந்திய கழகத்துடன் இணையும் தீர்மானத்தை கைவிட்டுள்ளார் என இங்கிலாந்தின் ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது

தனிப்பட்டக் காரணங்களால் அவர் தமது தீர்மானத்தை மாற்றிக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பில் பெரிதும் ஏமாற்றம் அடைந்துள்ளதாக லங்காஷெயார் கழகத்தின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் க்ளென் செப்பல் தெரிவித்துள்ளார்

இந்த மாத இறுதியில் ஆரம்பமாகவிருந்த நெடவெஸ்ட் தொடருக்காக மஹெல அணியில் இணைவதாக இருந்தது. அவர் இந்த தீர்மானத்தைக் கைவிட்டுள்ள நிலையில், புதிய வீரரை தெரிவு செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts: