திணறும் சென்.ஜோன்ஸ்! முன்னணியில் சென்றல்!!

Saturday, March 10th, 2018

வடக்கின் பெருஞ்சமரின் இரண்­டா­வது இன்­னிங்ஸில் 8 ஓட்­டங்­க­ளுக்கு 4 விக்­கெட்­டுக்­களை இழந்து தடுமாறி வரு­கின்­றது சென்.ஜோன்ஸ் கல்­லூரி அணி.

போட்­டியில் நாணயச் சுழற்­சியில் வெற்றி பெற்ற யாழ்.மத்­திய கல்­லூரி அணித் தலை வர் தசோபன் முதலில் பந்­து­வீச முடி­வு­செய்தார். அதன்­படி முதலில் கள­மி­றங்­கிய சென். ஜோன்ஸ் கல்லூரி அணி 217 ஓட்­டங்­களைப் பெற்று அனைத்து விக்­கெட்­டுக்­க­ளையும் இழந்­தது.

அதனைத் தொடர்ந்து தனது முதல் இன்­னிங்ஸை ஆரம்­பித்த யாழ். மத்­திய கல்­லூரி அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 43 ஓட்­டங்­க­ளுக்கு ஒரு விக்­கெட்டை இழந்­தி­ருந்­தது. இந்­நி­லையில் நேற்றைய இரண்டாம் நாளில் அபா­ர­மாக ஆடிய மத்­திய கல்­லூரி அணி தனது முதல் இன்­னிங்ஸில் 328 ஓட்­டங்­களைப் பெற்­றுக்­கொண்­டது.

இதில் அன்­டனி ஜெய­தர்ஷன் 77 ஓட்­டங்­க­ளையும் செல்­வ­ராசா மதுஷான் 52 ஓட்­டங்­க­ளையும் ராஜரட்னம் ராஜ்­கி­ளிண்டன் 54 ஓட்­டங்­க­ளை யும் விளாசி அணியின் ஓட்ட எண்­ணிக்­கையை உயர்த்­தினர்.

அதனைத் தொடர்ந்து 111 ஓட்­டங்கள் பின்­தங்­கிய நிலையில் தனது இரண்­டா­வது இன்­னிங்ஸை ஆரம்­பித்த சென்.ஜோன்ஸ் அணி நேற்­றைய ஆட்டநேர முடிவில் மள­ம­ள­வென விக்­கெட்­டுக்­களை இழக்க 8 ஓட்­டங்கள் பெறு­வ­தற்குள் 4 விக்­கெட்­டுக்­களை இழந்து இக்­கட்­டான நிலைக்கு தள்ளப்பட்டது. இன்­றைய கடைசி நாளில் சென்.ஜோன்ஸ் அணி தோல்வியைத் தவிர்க்க கடுமையாக போராட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது

Related posts: