தற்பரன் வெற்றிக்கிண்ணம் ஞானவைரவர் அணிவசம்!

Tuesday, October 11th, 2016

கோல்ட்ஸ்ரார் விளையாட்டுக்கழகம் நடத்திய தற்பரன் வெற்றிக்கிண்ணம் மென்பந்து துடுப்பாட்ட சுற்றுப்போட்டி நடைபெற்றது. 11 அணிகள் விலகல் முறையில் சுற்றுக்கள் நடைபெற்று இறுதிப்போட்டிக்கு முரசொலி மற்றும் ஞானவைரவர் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன.

இறுதிப்போட்டியானது நேற்றுமுன்தினம் யூனியன் மைதானத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது. இறுதிப்போட்டி நிகழ்வில் சிறப்பு விருந்தினராக 521 ஆவது படைப்பிரிவின் கேணல் நுனுவில, மேஜர் செனவீரட்ன ஆகியோரும் மற்றும் சிறப்பு விருந்தினர்களாக கோல்ட் அணியின் ஆலோசகர் கஜேந்திரன் (ஐளுயு,வலிகாமம் பிரிவு) உடற்பயிற்சி ஆசிரியர், தர்சா தமிழ் பதிப்பக உரிமையாளரும் கோல்ட்ஸ்ரார் அணியின் ஆலோசகருமாகிய தனுசனும் நிகழ்வில் கலந்து சிறப்பித்தார்கள். இவ் இறுதிப்போட்டியின் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய முரசொலி அணி 9 பந்துபரிமாற்றங்களில் அனைத்து இலக்குகளையும் இழந்து 61 ஓட்டங்களை பெற்றது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஞானவைரவர் அணி 4 பந்துகள் மீதமிருக்க 9.2 ஓவர்களில் 5 இலக்குகளை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. இறுதிப்போட்டியின் ஆட்ட நாயகனாக ஞானவைரவர் அணியின் கயூரனும் தொடர் நாயகனாக ஞானவைரவர் அணியின் விதுரனும் தெரிவாகினார்.

Untitled-2 copy

Related posts: