டெஸ்ட் போட்டிகளில் இருந்து நாணய சுழற்சி முறை நீக்கம்!

Saturday, May 19th, 2018

அவுஸ்திரேலியாவின் மெல்பர்ன் மைதானத்தில் கடந்த 1877ம் ஆண்டு இடம்பெற்ற இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டியின் போது அறிமுகப்படுத்தப்பட்ட நாணய சுழற்சி முறையினை கைவிட சர்வதேச கிரிக்கட் சம்மேளனம் அவதானம் செலுத்தியுள்ளது.

டெஸ்ட் போட்டித் தொடர் இடம்பெறும் நாடுகளை சேர்ந்த அணிகள் தமக்கு ஏற்றவாறு மைதான ஆடுகளத்தை தயார் படுத்திக்கொள்வதன் காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனால் 2019ம் ஆண்டு இடம்பெறவுள்ள ஆஷஸ் போட்டி தொடரின் போது நாணய சுழற்சி முறையினை நீக்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் ஐசிசி கிரிக்கட் குழு எதிர்வரும் 28ம் திகதிக்கு முன்னர் தீர்மானமொன்றிக்கு வரவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தக் குழுவில் இலங்கை அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன மற்றும் ஐசிசியின் தலைமை நடுவரான ரஞ்சன் மடுகல்லே ஆகியோர் உள்ளடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: