டிவில்லியர்ஸை தலைவணங்குகின்றேன் – கோஹ்லி

Wednesday, May 25th, 2016

ஐ.பி.எல் தொடரின்முதல் குவாலிபையரில் குஜராத் அணியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்களூர் அணி இறுதிப் போட்டிக்குமுன்னேறியது.

இந்த போட்டியில் முதலில் விளையாடிய குஜராத் அணி 20 ஓவரில் 158 ஓட்டங்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது.

அடுத்து களமிறங்கிய பெங்களூரு அணி 29 ஓட்டங்களுக்குள் 5 விக்கெட்டுக்களை இழந்தது. வீராட் கோஹ்லி டக் அவுட் ஆனார். கெயில், வாட்சன், ராகுல் உள்ளிட்டோரும் ஆட்டமிழந்தனர்.

எனவே தோல்வியடையும் என்று கருதிய நேரத்தில் டிவில்லியர்ஸ் அதிரடியாக விளையாடி ஆட்டத்தின் போக்கை மாற்றினார். இதனால் 18.2 ஓவர்களில் பெங்களூர் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதுகுறித்து வீராட் கோஹ்லி கூறுகையில் –  இந்தப் போட்டி உலகின் தலைசிறந்த துடுப்பாட்ட வீரர் யார் என்ற விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்று நினைக்கிறேன். எங்களை இறுதிப் போட்டிக்கு அழைத்து சென்ற டிவில்லியர்ஸை தலை வணங்குகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Related posts: