சென்னை அணியின் பயிற்சியாளர் மெட்டாரஸி விலகல்!

Wednesday, March 8th, 2017
இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில் விளையாடி வரும் சென்னையின் எப்.சி. அணியின் தலைமைப் பயிற்சியாளர் மார்கோ மெட்டாரஸி பதவி விலகியுள்ளார்.
கடந்த 3 சீசன்களில் சென்னை அணிக்கு பயிற்சியளித்த இத்தாலியின் மெட்டாரஸியும், அணி நிர்வாகமும் பரஸ்பர சம்மதத்துடன் பிரிந்துள்ளனர்.
முதல் சீசனில் பயிற்சியாளர் மற்றும் வீரராக களம்புகுந்த மெட்டாரஸி, அடுத்த இரு சீசன்களில் பயிற்சியாளராக மட்டுமே செயல்பட்டார். இவருடைய பயிற்சியின் கீழ் முல் சீசனில் அரையிறுதி வரை முன்னேறிய சென்னை அணி, அடுத்த சீசனில் சாம்பியன் ஆனது குறிப்பிடத்தக்கது.

Related posts: