சச்சின் அன்றே சொன்னார் – பாண்ட்யா!

Thursday, June 22nd, 2017

இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக மாறி வருபவர் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டயா.இவருடைய அதிரடி ஆட்டம் மற்றும் சிறப்பான பந்து வீச்சின் மூலம் இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உருவாகிவிட்டது.

சாம்பியன்ஸ் லீக் தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தின் போது, இந்திய அணியின் துடுப்பாட்ட வீரர்கள் வந்த வேகத்தில் பெளலியன் திரும்பிக் கொண்டிருந்த போது, தனி ஒருவனாக நின்று பாகிஸ்தான் அணியை மிரட்டினார். ஆனால் எதிர்பாரதவிதமாக ரன் அவுட் ஆகி வெளியேறினார். இருந்த போதும் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பாக விளையாடிய பாண்ட்யாவுக்கு தற்போது வரை வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

இந்நிலையில் அவர், உங்களுக்கு கிரிக்கெட்டை பிடித்திருந்தால், நிச்சயமாக சச்சினை உங்களால நேசிக்காமல் இருக்க முடியாது. நான் ஐ.பி.எல் தொடரில் மும்பை அணிக்காக வீரர்களுடன் இணைந்த போது சொர்க்கத்தில் இருப்பதை போன்று உணர்ந்தேன். அன்றைய தினம் நான் தட்டில் சாப்பாடுகளை வைத்து சாப்பிட்டுக் கொண்டிருந்தேன்.

அப்போது திடீரென்று என்னுடைய தோள்பட்டையில் ஒருவர் கை வைத்தார். யார் என்று திரும்பி பார்த்த போது, சச்சின், அவர் தன்னிடம் இதே போன்று நீ உன்னுடைய ஆட்டத்தை வெளிப்படுத்தினால், அடுத்த ஒரு வருடத்தில் இந்திய அணியில் இடம்பிடிப்பாய் என்று கூறினார். அந்த வார்த்தையை கேட்ட போது மிகவும் அதிர்ஷ்டமாக இருந்தது. அவர் சொன்னதைப் போல ஒரு வருடம் அல்ல, ஐந்து மாதத்திலே இந்திய அணியில் இடம் பிடித்துவிட்டேன் என்று உருக்கமாக கூறியுள்ளார்.

Related posts: