கோஹ்லி- கும்ப்ளே மோதல்?
Wednesday, May 31st, 2017
இந்திய அணியின் அணித்தலைவர் வீராட் கோஹ்லிக்கும், தலைமை பயிற்சியாளர் அனில் கும்ப்ளேவுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ- யிடம் வீராட் கோஹ்லி புகார் எழுப்பியுள்ளதால், அனில் கும்ப்ளேவை மாற்றுவதற்கான நடவடிக்கைகளில் பிசிசிஐ இறங்கியுள்ளதாக தெரிகிறது.
மேலும் வீரேந்திர ஷேவாக்கை தலைமை பயிற்சியாளராக நியமிக்க பிசிசிஐ திட்டமிட்டு வருவதாகவும், இதுகுறித்து ஐபிஎல் தொடரின் போதே ஷேவாக்கிடம் பேசியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இதனை ஷேவாக் ஏற்றுக்கொள்ளவில்லை என கூறப்படுகிறது. அணி வீரர்களுக்கு கும்ப்ளே சுதந்திரம் அளிக்க மறுப்பதே மோதலுக்கான காரணம் என கூறப்படுகிறது.
Related posts:
மாகாண மட்ட கராத்தே சென்.ஜோன்ஸ் சாதனை!
அவுஸ்திரேலிய கனவு அணியில் ரங்கன ஹேரத்துக்கு இடம்!
கால்பந்து வீரர் மெஸ்ஸிக்கு 21 மாதம் சிறைத் தண்டனை!
|
|