குறிவைத்து தாக்கப்படும் கோஹ்லி – பிசிசிஐ முன்னாள் தலைவர்!

Monday, June 26th, 2017

இந்திய அணியின் தலைவரான விராட் கோஹ்லி குறிவைத்து தாக்கப்படுவதாக பிசிசிஐ முன்னாள் தலைவர் அனுராக் தாகூர் கூறியுள்ளார்.

இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்தவர் அனில் கும்ப்ளே. இவருக்கும் இந்திய அணியின் தலைவரான விராட் கோஹ்லிக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவுவதாக கூறப்பட்டு வந்தது.அதை நிரூபிக்கும் விதமாக கும்ப்ளே-வும் தனது பயிற்சியாளர் பதவியை இராஜினாமா செய்தார்.

கும்ப்ளே பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகியதற்கு கோஹ்லி தான் காரணம் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலர் கருத்துக்கள் கூறி வருகின்றனர்.இந்நிலையில் இது குறித்து முன்னாள் பிசிசிஐ தலைவர் அனுராக் தாகூர் கூறுகையில், விராட் கோஹ்லி காரணம் ஏதுமின்றி குறிவைத்து தாக்கப்படுகிறார். இந்த விவாதம் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

அடுத்த 10 வருடத்திற்கு இந்திய அணியை முன்னணிக்கு கொண்டு செல்லும் திறமை படைத்தவர் அவர் என்று கூறியுள்ளார்.

Related posts: