காலிறுதி போட்டிக்கு தகுதி பெற்றன பிரேஸில், பெல்ஜியம் !

2018 பீபா உலக கிண்ண கால்பந்து தொடரின், 2ஆம் சுற்று ஆட்டத்தில் மேலும் இரண்டு போட்டிகள் நேற்று இடம்பெற்றன.
அதன்படி, பிரேஸில் மற்றும் மெக்சிகோ அணிகளுக்கு இடையிலான போட்டியில் பிரேஸில் அணி 2:0 என்ற கோல் கணக்கில் மெக்சிகோ அணியை வெற்றிகொண்டது.
அதுபோல், பெல்ஜியம் மற்றும் ஜப்பான் ஆகிய அணிகளுக்கு இடையிலான போட்டியில் பெல்ஜியம் அணி 3:2 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வெற்றிகொண்டது.
பெல்ஜியம், பிரேஸில் மற்றும் குரேஷியா ஆகிய அணிகள் காலிறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன.
இந்தநிலையில் காலிறுதியில் விளையாடும் கடைசி இரண்டு அணிகளை தெரிவு செய்யும் போட்டிகள் இன்று இடம்பெறவுள்ளன.
அதன்படி, இன்றைய தினம் சுவிடன் மற்றும் சுவிட்சர்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியும், கொலம்பியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியும் இடம்பெறவுள்ளன.
Related posts:
ஜமைக்காவிலிருந்து மற்றுமொரு புதிய புயல்!
100 சதங்கள் கடந்த சங்ககாரா!
இலங்கை அணி தோல்வி சிம்பாப்வே வெற்றி!
|
|