பாகிஸ்தான் அணியில் விளையாடும் இந்திய வீராங்கனை!

Saturday, June 24th, 2017

காஷ்மீரை பூர்வீகமாகக் கொண்ட வீராங்கனையான சனா மிர், பாகிஸ்தான் பெண்கள் கிரிக்கெட் அணியின் தலைவராக விளையாடி வருகிறார் என செய்திகள் கூறுகின்றன.

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரை தொடர்ந்து லண்டனில் ஐசிசி பெண்கள் உலகக் கோப்பை நடக்கிறது. வரும் 24ம் திகதி முதல் பிரதான போட்டிகள் துவங்குகிறது.

இதில் பங்கேற்கும் பாகிஸ்தான் அணியின் கேப்டனாக சனா மிர் உள்ளார். ஒரு நாள் கிரிக்கெட்டில் 100 விக்கெட் சாய்த்த முதல் பாகிஸ்தான் வீராங்கனை என்ற பெருமை பெற்றவர் இவர் தான்.

அதேபோல சர்வதேச அளவில் ஒரு நாள் கிரிக்கெட்டில் 1000 ரன்களை கடந்த ஆறாவது வீராங்கனை சனா மிர் திகழ்கிறார். இவரது பூர்வீகம் காஷ்மீராகும். இவரது குடும்பம் சிறு வயதிலேயே இடம் பெயர்ந்து பாகிஸ்தானுக்கு சென்றுவிட்டனர்.

இவர் இம்ரான் கானின் ரசிகை. இம்ரான் கான் மட்டுமே பாகிஸ்தானுக்காக கிரிக்கெட் உலகக் கோப்பையைப் பெற்றுக் கொடுத்தவர். அவரது ரசிகையான சனா மிரின் கனவும் அதுதானாம்.

Related posts: