ஐ.பி.எல். தொடர் இந்தியாவில் நடைபெறும் – இந்திய கிரிக்கெட் வாரியம்!
Wednesday, January 9th, 2019
இந்த ஆண்டுக்கான 12ஆவது ஐ.பி.எல் தொடரானது எதிர்வரும் மார்ச் மாதம் 23 ஆம் திகதி ஆரம்பாகவுள்ள நிலையில் குறித்த தொடரின் அனைத்துப் போட்டிகளும் இந்தியாவில் நடைபெறும் என இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் பொதுத் தேர்தல் காரணமாக குறித்த தொடரானது தென்னாபிரிக்காவுக்கு மாற்றப்படுமா என்ற கேள்வி எழுந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நிர்வாகக் குழுவின் தலைவரான வினோத் ராய் டெல்லியில் முக்கிய அதிகாரிகளை சந்தித்து நடாத்திய பேச்சுவார்த்தையில் ஐ.பி.எல் தொடரை இந்தியாவில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
2009 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின்போது ஐ.பி.எல். தொடர் தென் ஆப்பிரிக்காவிலும், 2014 ஆம் ஆண்டு ஐக்கிய அரபு எமிரேட்சிலும் நடத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
ரியோ ஒலிம்பிக்கில் தாக்குதல் நடத்த திட்டம்: 10 பேர் கைது!
வலுவான நிலையில் இந்தியா - முரளி விஜய், புஜாரா சிறப்பான ஆட்டம்!
2011 ஆம் ஆண்டு உலக கிண்ண சர்ச்சை தொடர்பில் முரளி கருத்து!
|
|
|


