ஐ.பி.எல். :ஆரம்ப போட்டிகளில் இருந்து கோஹ்லி விலகல்!

Friday, March 31st, 2017

இந்திய அணியின் தலைவர் விராட் கோஹ்லி இவ்வருட ஐ.பி.எல். தொடரின் ஆரம்ப போட்டிகளில் விளையாடுவதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கோஹ்லியின் வலது தோற்பட்டையில் ஏற்பட்டுள்ள உபாதை காரணமாக இவர் சில வாரங்கள் ஓய்வில் இருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

கோஹ்லி ஐ.பி.எல். தொடரில் பெங்களூர் ரோயல் செலஞ்சர்ஸ் அணியின் தலைவராக இருப்பதுடன், அவர் ஐ.பி.எல். தொடரில் 973 ஓட்டங்களை பெற்றுக் கொண்டுள்ளார்.

எவ்வாறாயினும் கோஹ்லி ஒரு போட்டியில் மாத்திரமே விளையாடமாட்டார் என பெங்களூர் அணி நிர்வாகம் மேலும் தெரிவித்துள்ளது.

Related posts: