ஐசிசி உலகக் கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் – இந்திய அணிக்கு 125 கோடி இந்திய ரூபாய் பரிசுத் தொகை!

Monday, July 1st, 2024

ஐசிசி உலகக் கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் கிண்ணத்தை வென்ற இந்திய அணிக்கு 125 கோடி இந்திய ரூபாய் பரிசுத் தொகையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் செயலாளர் ஜெய் ஷா இதனைத் தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் குறித்த தொடர் முழுவதும் இந்திய அணி வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்ததாகவும், அவர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.

000

Related posts: