எங்களுக்கு வெற்றி தான் – இலங்கை அணி தலைவர்

Monday, October 16th, 2017

இலங்கை அணியின் ஒருநாள் போட்டிகளின் தொடர் தோல்விகள் மற்றும் அதை சரி செய்யும் வழிகள் குறித்து அணி தலைவர் உபுல் தரங்க யோசனை தெரிவித்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணி 2019-ல் நடக்கவிருக்கும் உலக கிண்ண தொடருக்கு தட்டுதடுமாறி நேரடி தகுதி பெற்றது. ஒருநாள் தரவரிசை பட்டியலில் எட்டாவது இடத்தில் இருக்கும் இலங்கை இந்த வருடம் பங்கேற்ற 22 ஒருநாள் போட்டிகளில் வெறும் 4-ல் மட்டுமே வெற்றி பெற்றது.

தென் ஆப்பிரிக்காஇ இந்தியாஇ ஜிம்பாப்வே உள்ளிட்ட நாடுகளுக்கு எதிரான ஒருநாள் தொடரை இலங்கை இழந்தது.

தற்போது நடந்துவரும் பாகிஸ்தானுடனான ஒருநாள் தொடரின் முதல் போட்டியிலும் இலங்கை தோற்றது. இலங்கையின் தொடர் தோல்விகள் குறித்து பேசிய அணித் தலைவர் உபுல் தரங்காஇ நிலையற்ற ஆட்டத்தை வெளிப்படுத்துவதே எங்கள் தோல்விக்கு முக்கிய காரணமாகும்.

ஒரு ஆட்டத்தில் நன்றாக விளையாடினால்இ அதை அடுத்த ஆட்டத்தில் வெளிப்படுத்த தவறிவிடுகிறோம்.துடுப்பாட்டம் தான் இலங்கை அணிக்கு பெரும் பின்னடைவாக உள்ளது. ஒருநாள் தொடர்களை தொடர்ச்சியாக இழப்பதற்கு காரணம் இதுதான்.

சமீபகாலமாக பீல்டிங்கும் எங்கள் அணியில் மோசமாக இருந்த நிலையில்இ பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் பீல்டிங்கில் முன்னேற்றம் இருந்ததை காணமுடிந்தது. இதையெல்லாம் சரி செய்துவிட்டால் அணி சீராகி விடும் என தரங்க கூறியுள்ளார்.

Related posts: