உள்ளூர் தொடரில் விளையாட பொலார்டுக்கு அனுமதி!

Thursday, November 10th, 2016

தென்னாபிரிக்காவின் உள்ளூர் இருபதுக்கு-20 தொடரில் பங்குபற்றுவதற்கு, மேற்கிந்தியத் தீவுகள் அணியின் சகலதுறை வீரர் கெரான் பொலார்டுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவருக்கு அனுமதி வழங்குவதில், ஆரம்பத்தில் நிலவிய இழுபறிக்குப் பின்னரே, தற்போது இந்த அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு இருபதுக்கு-20 தொடர்களில் பங்குபற்றும் வீரர்களின் ஒப்பந்தத் தொகையில் 20 சதவீதம், மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் சபைக்கு வழங்கப்பட வேண்டுமென்ற நிபந்தனை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்தே, இத்தொடரில் விளையாடுவதற்கு, பொலார்டுக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கவில்லை.

இந்நிலையில், பங்குபற்றுவதற்கான அனுமதியை மறுப்பதற்கு, சபை தீர்மானித்திருக்க வில்லையெனவும் தாமதத்துக்கு வருந்துவதாகவும் தெரிவித்த சபையின் பிரதம நிறைவேற்றதிகாரி மைக்கல் முய்ர்ஹெட், 20 சதவீத தீர்வை குறித்து, பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்

AFP_BX7ND

Related posts: