துரையப்பா விளையாட்டரங்கில் பாடசாலைகளுக்கு இடையிலான அஞ்சல் ஓட்ட விளையாட்டு போட்டி!

Saturday, September 9th, 2017

அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான அஞ்சல் ஓட்ட விளையாட்டு போட்டி யாழ்ப்பாணம் துறையப்பா மைதானத்தில் தற்போது நடைபெறுகிறது.

கல்வி இராஜாங்க அமைச்சர் இராதாகிருஸ்ணன் தமைமையில் இது தொடர்பான நிகழ்வு இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் உரையாற்றிய கல்வி இராஜாங்க அமைச்சர் ‘இன்றைய இளைஞர்கள் நாட்டின் நாளைய தவைர்கள் தெற்கில் இருந்து வடக்கிற்கு பெருமலான மாணவர்கள் அஞ்சல் ஓட்ட விளையாட்டு போட்டியில் கலந்துக் கொள்கின்றார்கள். இது இரு இனங்களுக்கு இடையில் ஒற்றுமையை ஏற்படுத்தும் நிகழ்வாகும்.

இந்த மாணவ சழூதாயமே நாட்டின் நாளைய தலைவர்கள் அவ்வாறனவர்களின் மத்தியில் சிறு வயதிலேயே இவ்வாறான நிகழ்வுகளை ஏற்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயமாகும் என்று தெரிவித்தார்.கல்வி அமைச்சு ஏற்பாடு செய்துள்ள பாடசாலை அஞ்சல் ஓட்டப்போட்டி; 12, 14, 16, 18 மற்றும் 20 வயதடிப்படையில் ஐந்து பிரிவுகளில் போட்டிகள் நடைபெறுகின்றன. ஆண்கள் பிரிவில் 164 பாடசாலைகளைச் சேர்ந்த இரண்டாயிரத்து 900 வீரர்களும், 138 பெண்கள் பாடசாலைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி இரண்டாயிரத்து 100 பேரும் கலந்து கொள்கின்றனர்.

இந் நிகழ்வில் வட மாகாண கல்வி அமைச்சர் கே.சர்வேஸ்வரன் உட்பட கல்வி அதிகாரிகள் விளையாட்டுதுறை அதிகாரிகள் கலந்துக் கொண்டார்கள்.

Related posts: