உலகக்கிண்ண றக்பி : அரையிறுதி போட்டிக்கு நியுசிலாந்து தகுதி !

Sunday, October 20th, 2019

2019 றக்பி உலகக்கிண்ண தொடரின் இன்று இடம்பெற்ற மற்றுமொரு காலிறுதி போட்டியில் நியுசிலாந்து அணி வெற்றிப் பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.

நியூசிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற இந்த போட்டியில் 46 – 14 என்ற கணக்கில் நியூசிலாந்து அணி வெற்றிப் பெற்று அரையிறுதிக்கு தகுதிப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இன்று இடம்பெற்ற முதலாவது காலிறுதி போட்டியில் அவுஸ்திரேலியா அணியை வீழ்த்தி இங்கிலாந்து அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றிருந்தது.

40-16 என்ற கணக்களில் இங்கிலாந்து அணி அவுஸ்திரேலியா அணியை வீழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: