உடுவில் மகளிர் கல்லூரிக்கு மூன்றாமிடம்!

Saturday, May 5th, 2018

 

கீர்த்திகன் ஞாபகார்த்த வெற்றிக் கிண்ணத்துக்காக நடத்தப்பட்டுவரும் கூடைப்பந்தாட்டத் தொடரில் பெண்கள் பிரிவில் உடுவில் மகளிர் கல்லூரி அணி மூன்றாவது இடத்தைத் தனதாக்கியது.

கொக்குவில் இந்துக் கல்லூரியின் கூடைப்பந்தாட்டத் திடலில் இடம்பெற்ற இந்த ஆட்டத்தில் உடுவில் மகளிர் கல்லூரி அணியை எதிர்த்து யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி அணி மோதியது. முதலாவது கால் பாதியை உடுவில் மகளிர் கல்லூரி அணி 23:04 என்ற புள்ளிகளின் அடிப்படையில் முன்னிலை பெற்றது. இரண்டாவது பாதியில் இரண்டு அணிகளும் தலா 10 புள்ளிகளைப் பெற்றன. முதல் பாதியின் முடிவில் 33:14 என்ற புள்ளிகளின் அடிப்படையில் முன்னிலை வகித்தது உடுவில் மகளிர் கல்லூரி அணி.

மூன்றாம் கால்பாதியை 17:11 என்ற புள்ளிகளின் அடிப்படையில் கைப்பற்றி பதிலடி கொடுத்தது யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி அணி. நான்காவது கால்பாதியில் உடுவில் மகளிரின் ஆதிக்கம் மீண்டும் மேலோங்கியது. அந்த அணி 24:15 என்ற புள்ளிகளின் அடிப்படையில் நான்காவது கால்பாதியைக் கைப்பற்றியது. முடிவில் 68:46 என்ற புள்ளிகளின் அடிப்படையில் வெற்றிபெற்று மூன்றாம் இடத்தைத் தனதாக்கியது உடுவில் மகளிர் கல்லூரி அணி.

Related posts: