செஸ் ஒலிம்பியாட் தொடர் – இணை சம்பியனான இந்தியா மற்றும் ரஷ்யா அறிவிப்பு!
Monday, August 31st, 2020செஸ் ஒலிம்பியாட் தொடரில் முதன்முறையாக இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.
செஸ் ஒலிம்பியாட் தொடரின் 44ஆவது பருவக்கால போட்டிகள் இணையம் ஊடாக நடந்தது. 163 அணிகள் பங்கேற்ற இப்போட்டியின் இறுதியாட்டத்தில் இந்திய அணி ரஷ்யாவை எதிர்கொண்டது. இணையதளத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இருநாடுகளும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இந்திய அணிக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் , பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
திறமையை வெளிப்படுத்தி வெற்றி பெற்ற இந்திய செஸ் அணியை எண்ணி நாட்டு மக்கள் மிகவும் பெருமைப்படுவதாக குடியரசு தலைவர் தமது டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இப்போட்டியில் வெற்றி பெற்ற ரஷ்ய செஸ் அணிக்கும் குடியரசு தலைவர் பாராட்டு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இலங்கையின் சுதந்திரக் கிண்ணத் தொடருக்கு இந்தியாவுக்கு அழைப்பு!
ஓய்வை எதிர்பார்ப்பது இவர்கள் மட்டும் தான் - ரவி சாஸ்திரி!
ஒரு ஓவரில் 7 சிக்ஸர்களை விளாசி உலக சாதனை படைத்த இலங்கையின் இளம் வீரர்
|
|