இலங்கை வீரரகளுக்கான சிறப்பு பயிற்சி – பயிற்சியாளர்!
Saturday, December 30th, 2017
இலங்கை அணிக்கான புதிய தலைமைப்பயிற்றுவிப்பாளரான சந்திக்க ஹத்துருசிங்க நேற்றைய தினம் தனது உத்தியோகபூர்வ பயிற்றுவிப்பை ஆரம்பித்துள்ளார்.
பங்களாதேஸிற்கான தொடரை தனது முழுமையான தொடராக இலக்கு வைத்து இலங்கை வீரரகளுக்கு உத்தியோகபூர்வ பயிற்றுவிப்பை தேர்வு செய்யப்பட்ட 23 வீரர்களை உள்ளடக்கி ஆரம்பித்துள்ளார், இந்த பயிற்றுவிப்பின் கீழ் தேர்வாகும் வீரர்கள் பங்களாதேஸ் தொடருக்கான குழாமில் இணைக்கப்படுவார்கள்.
கொழும்பு, எஸ்.எஸ்.சி மைதானத்தில் சிறப்பு பயிற்றுவிப்பு இடம்பெறுகின்றது. மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் ஹத்துருசிங்க பயிற்றுவிப்பை வழங்கி வருகின்றார்.
நடப்பு வருடத்தில் மட்டும் 40 போட்டிகளில் இலங்கை அணி தோல்வியைத்தழுவியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
ரியோ ஒலிம்பிக் இன்று ஆரம்பம்!
வங்கதேசத்தை சுருட்டிய இலங்கை!
உலகக் கிண்ணத் தொடர் - ஆஸிக்கு எதிராக பங்களாதேஷ் அணி இன்று களமிறங்குகிறது!
|
|