இலங்கை வரும் பாகிஸ்தான் மகளிர் அணி!

Tuesday, February 27th, 2018

 

இலங்கை மற்றும் பாகிஸ்தான் மகளிர் அணிகளுக்கு இடையிலான கிரிக்கட் தொடர் ஒன்று இலங்கையில் இடம்பெறவுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கட் சபை அறிவித்துள்ளது.

இந்தத் தொடர் மார்ச் மாதம் 20ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை மூன்று ஒருநாள் மற்றும் மூன்று இருபதுக்கு இருபது போட்டிகளைக் கொண்டு இடம்பெறவுள்ளது.

கடந்த ஆண்டு ஒக்டோபரில் மேற்கிந்திய தீவுகள் மகளிர் அணியுடனான தொடரின் பின்னர் இலங்கை மகளிர் அணி மோதும் முதலாவது தொடர் இதுவாகும்.  இந்த தொடரின் அனைத்து ஒரு நாள்போட்டிகளும் தம்புள்ளையில் இடம்பெறவுள்ளன.

மார்ச் மாதம் 28ஆம் திகதி ஆரம்பமாகும் இருபதுக்கு இருபது போட்டித் தொடரின் மூன்று போட்டிகளும் கொழும்பில் இடம்பெறவுள்ளது.

Related posts: