இலங்கை கிரிக்கெட் அணி மறுக்கிறது!

Saturday, July 29th, 2017

பாகிஸ்தானில் டி20 போட்டிகளில் விளையாடுவதற்கு இலங்கைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் தாம் பாகிஸ்தானில் விளையாடுவதற்கு தாயாராக இல்லை என்று இலங்கை மறுத்துள்ளது.

ஆனால், இதற்கு இலங்கை கிரிக்கெட் வாரிய அதிகாரிகள் மறுத்துள்ளனர் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய சேர்மன் சகாரியார் கான் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது, உலகில் பல இடங்களில் தீவிரவாத தாக்குதல் நடந்துகொண்டிருக்கிறது. அங்கெல்லாம் விளையாட்டுப் போட்டிகள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன.

ஆனால் பாகிஸ்தானுக்கு இலங்கை வரமறுத்தது வியப்பாக இருக்கிறது என்று கூறியுள்ளார். பாகிஸ்தானில் 2009 ம் ஆண்டு இலங்கை கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது, பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.

இதில் இலங்கை வீரர்கள் ஜெயவர்த்தனே, சங்ககாரா உள்ளிட்ட 7 வீரர்கள் காயம் அடைந்தனர். இதற்கு பின்னர் பாகிஸ்தானில் விளையாடுவதற்கு இலங்கை அணி மறுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: