இலங்கை கிரிக்கட் அணி வீரர்களுக்கு எச்சரிக்கை!

Thursday, June 22nd, 2017

எதிர்வரும் கிரிக்கட் போட்டிகளில் இலங்கை கிரிக்கட் அணிக்கு வீரர்களை தேர்வு செய்யும் போது அவர்களின் உடற்தகுதி பரிசோதிக்கப்பட்டு சிறந்த உடற்தகுதி உள்ளவர்கள் மாத்திரமே அணியில் இணைத்துக்கொள்ளப்படுவார்கள் என விளையாட்டுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட போது அமைச்சர் இதனை தெரிவித்திருந்தார்.மேலும் உடற்தகுதி பரிசோதனையில் சித்தி பெறாத வீரர்கள் எந்தளவு சிறந்த வீரராக இருந்தாலும் அணியில் இணைத்துக்கொள்ளப்பட மாட்டார்கள் என அவர் தெரிவித்திருந்தார்

Related posts: