இலங்கை அணியின் மலிந்த புஷ்பகுமார புதிய கிரிக்கெட் சாதனை!

Monday, January 7th, 2019

இலங்கை அணியின் எதிர்கால இடக்கை சுழற்பந்து வீச்சாளர் என்ற நம்பிக்கை நட்சத்திரமான மலிந்த புஷ்பகுமார புதிய கிரிக்கெட் சாதனை ஒன்றினை நிகழ்த்தியுள்ளார்.

இம்முறை முதல் தர போட்டியில் சிறந்த பந்து வீச்சாளர் என சாதனை படைத்துள்ளார்.

ccc அணியினை பிரதிநிதித்துவப்படுத்தும் அவர் செரசன்ஸ் அணிக்காக விளையாடியே குறித்த சாதனையினை நிகழ்த்தியுள்ளார்.

குறித்த போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் 37 ஓட்டங்களுக்கு 10 விக்கெட்களை கைப்பற்றி குறித்த சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.

இதற்கு முன்பதாக 1991 இல் பிரேமதாச விக்கிரமசிங்க 41 ஓட்டங்களுக்கு 10 விக்கெட்களை பெற்று சாதனை புரிந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts: