இலங்கை அணிக்கு எதிராக களமிறங்கும் சச்சினின் மகன்!

Friday, June 8th, 2018

19 வயதுக்கு உட்பட்ட கிரிக்கெட் தொடரில் இலங்கைக்கு எதிராக இந்திய அணியில் அர்ஜூன் டெண்டுல்கர் இடம்பெற்றுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர் உள்ளூர் கிரிக்கெட்டில் ஆல் ரவுண்டராக திகழ்கிறார்.
இந்த நிலையில் முதல்முறையாக அவர் 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து இலங்கைக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் அர்ஜூன் பங்கேற்று விளையாடவுள்ளார்.
இது தொடர்பாக மகிழ்ச்சி தெரிவித்துள்ள சச்சின், அர்ஜூன் கிரிக்கெட் வாழ்க்கையில் இது ஒரு முக்கிய மைல்கல் என தெரிவித்துள்ளார்.

Related posts: