இலங்கையை வௌ்ளையடித்தது பாகிஸ்தான்!

Monday, October 23rd, 2017

இலங்கை – பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான ஐந்தாவதும் இறுதியுமான போட்டியில் 9 விக்கட்டுக்களால் பாகிஸ்தான் அணி வெற்றிப் பெற்றுள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பாடிய இலங்கை அணி 26.2 ஓவர்களில் சகல விக்கட்டுகளையும் இழந்து 103 ஓட்டங்களை பெற்றது. பாகிஸ்தான் சார்பில் வேகப்பந்து வீச்சாளர் உஸ்மான் கான் 5 விக்கட்டுகளை கைப்பற்றினார்.

இலங்கை சார்பில் திசர பெரேரா அதிகபட்சமாக 25 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார். இந்நிலையில் , 104 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி ஒரு விக்கட்டை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

இதன்போது, Imam-ul-Haq 45 ஒட்டங்களையும், Fakhar Zaman 48 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். அதன்படி , 5 போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரில் 5-0 என்ற கணக்கில் தொடரை முழுவதுமாக கைப்பற்றி இலங்கை அணியை பாகிஸ்தான்.வௌ்ளையடிப்பு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: