இலங்கையின் தடகள அணியில் நான்கு தமிழ் வீரர்கள்!

Saturday, May 5th, 2018

கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் தெற்காசிய இளநிலைப் பிரிவினருக்கான தடகளத் தொடர் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு தினங்கள் நடைபெறவுள்ளன.

இலங்கை அணியில் வடக்கு மாகாணத்தைப் பிரதிநிதித்துவம் செய்து தமிழ் வீரர்கள் இருவர் இடம்பிடித்தனர்.

பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியின் சி.பிரகாஸ்ராஜ் தட்டு எறிதல் போட்டியிலும், வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியலாயத்தைச் சேர்ந்த கிந்துசன் 5 ஆயிரம், 10 ஆயிரம் மீற்றர்ஓட்டப்போட்டிகளிலும் பங்குபற்றவுள்ளனர்.

இதனிடையே 3ஆவது தடவையாக நடைபெறவுள்ள தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் இம்முறை இலங்கையிலிருந்து 84 வீர, வீராங்கனைகள் கலந்துகொள்ளவுள்ளனர்.

இதில் 44 வீரர்களும், 40 வீராங்கனைகளும் உள்ளடங்குகின்றனர்.

Related posts: