இருபதுக்கு 20 போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 4 விக்கட்டுக்களால் வெற்றி!

Thursday, March 4th, 2021

சுற்றுலா இலங்கை அணிக்கு எதிரான முதலாவது முதலாவது இருபதுக்கு 20 ஓவர் கிரிக்கட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 4 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.

கூலிஜ்ஜில் (Coolidge) இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற மேற்கிந்திய தீவுகள் முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கட்டுக்களை இழந்து 131 ஓட்டங்களை பெற்றது.

இலங்கை அணி சார்பில் பெத்தும் நிஸ்ஸங்க அதிகூடுதலாக 39 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். இந்தநிலையில் பதிலுக்கு துடுப்பெடுத்தாய மேற்கிந்திய தீவுகள் அணி 13.1 ஓவர்கள் நிறைவில் 6 விக்கட்டுக்களை இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.

இதனிடையே மேற்கிந்திய தீவுகள் அணியின் பிரபல துடுப்பாட்ட வீரரான பொலார்ட் ஒரு ஓவரில் 6 ஆறு ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

இலங்கைக்கெதிரான முதலாவது 20க்கு 20 போட்டியில் சுழற்பந்து வீச்சாளர் அகில தனஞ்சயவின் பந்து வீச்சிலேயே அவர் இவ்வாறு விளாசினார்.அதனையடுத்து வனிந்து ஹசரங்கவின் பந்து வீச்சிற்கு முகம்கொடுத்த பொலார்ட் ஆட்டமிழந்தார்.

இந்நிலையில் இலங்கை அணியின் சுழல் பந்து வீச்சாளர் அகில தனஞ்சய மூன்று விக்கெட்டுக்களை தொடர்ச்சியாக வீழ்த்தி ஹட்ரிக் சாதனை நிகழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: