இராஜினாமா செய்கிறாரா மத்யூஸ்!
Tuesday, July 11th, 2017இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் பதவியை இராஜினாமா செய்வது குறித்து இன்னும் யோசிக்கவில்லை எனவும் அதை பற்றி யோசிக்க கால அவகாசம் தேவை எனவும் இலங்கை அணியின் தலைவர் மத்யூஸ் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் சுற்றுபயணம் செய்து விளையாடிய ஜிம்பாப்வே அணி 3-2 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை கைப்பற்றி சாதனை படைத்தது.இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்
இந்த தோல்வியை ஜீரணிப்பது கடினமாக உள்ளது. நேற்றைய போட்டியில் டாஸ் போட்டதிலிருந்து பின்னர் நடந்த எல்லா விடயங்களும் தங்கள் அணிக்கு எதிராகவே அமைந்தது, ஆனாலும் தோல்விக்கு சாக்கு கூற தாம் விரும்பவில்லை. இந்த தொடர் முழுவதும் இலங்கை அணியின் பேட்டிங் சிறப்பாக இருந்ததாகவும், ஆனால் நேற்றைய முக்கிய போட்டியில் பேட்ஸ்மேன்கள் சரியாக விளையாடாததால் 203 ஓட்டங்கள் மட்டுமே எடுக்க முடிந்ததாக மேத்யூஸ் கூறியுள்ளார்.
மேலும் கத்துகுட்டி அணியுடன் தோல்வியடைந்ததால் தனது தலைவர் பதவியை இராஜினாமா செய்வாரா என மேத்யூஸிடம் கேள்வி கேட்கப் பட்டது. இதற்கு பதிலளித்த மேத்யூஸ், இது குறித்து இன்னும் யோசிக்கவில்லை எனவும் அதை பற்றி யோசிக்க தனக்கு கால அவகாசம் தேவை எனவும் கூறியுள்ளார். இது சம்மந்தமாக தெரிவு குழுவினருடன் பேச வேண்டும் எனவும் மேத்யூஸ் மேலும் தெரிவித்துள்ளார்.
2019ல் நடக்கவிருக்கும் உலக கிண்ண கிரிக்கெட் தொடர் வரை, தான் இலங்கை தலைவராக இருப்பேன் என உறுதியாக சொல்ல முடியாது என மேத்யூஸ் ஏற்கனவே கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|