இன்று கைச்சாத்தானது கிரிக்கெட் வீரர்கள் ஒப்பந்தம் !

Friday, October 21st, 2016

 

பல தினங்களாக இழுபறியாக இருந்து வந்த இலங்கை கிரிக்கெட் சபையுடனான இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தொடர்பான ஒப்பந்தம் இன்று (21) கைச்சாத்திடப்படவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

இன்று (21) பிற்பகல் 1.00 மணியளவில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வில், ஒப்பந்தத்தில் கையெழுத்திட 17 வீரர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

சிம்பாப்வே அணியுடனான தொடரிற்கு முன்னர் குறித்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ள நிலையில், ஒரு சில விடயங்கள் தொடர்பில் தீர்வு கிடைக்கப் பெறவில்லை எனவும் குறித்த ஒப்பந்தத்தில் அணியின் வீரர்களுக்கு வழங்கப்பட்ட சில சலுகைகள் குறைக்கப்பட்டிருந்ததாகவும் சில வீரர்கள் தெரிவித்திருந்தாக தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில், குறித்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திடவுள்ளதாக அஞ்சலோ மெத்திவ்ஸ் உள்ளிட்ட ஒரு சில வீரர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இலங்கையின் கிரிக்கெட் அபிவிருத்தி அடையுமானால், தாங்கள் எத்தகைய தியாகத்தையும் செய்யத் தயார் என, இது குறித்து சிரேஷ்ட வீரர் அஞ்சலோ மெத்திவ்ஸ் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதன்படி, பின்வரும் கிரிக்கெட் வீரர்கள், இலங்கை கிரிக்கெட் சபையுடனான வருடாந்த ஒப்பந்தத்தில் இன்று (21) கைச்சாத்திடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அணித் தலைவர் அஞ்சலோ மெத்திவ்ஸ், ரங்கன ஹேரத், தினேஸ் சந்திமால், திமுத் கருணாரத்ன, குஷல் ஜனித் பெரேரா, சுரங்க லக்மால், லஹிரு திரிமான்ன, தில்ருவன் பெரேரா, குசல் மெண்டிஸ், மிலிந்த சிறிவர்தன, நுவன் பிரதீப், கௌசால் சில்வா, தனஞ்சய டி சில்வா, துஷ்மந்த சமீர, தனுஷ்க குணதிலக, ஜெப்ரி வந்தர்சே, லக்‌ஷான் சந்தகன் உள்ளிட்ட வீரர்களே இவ்வாறு இணக்கம் தெரிவித்துள்ளதாக, இலங்கை கிரிக்கெட் நிறுவனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பில் இலங்கை கிரிக்கெட் சபை விடுத்துள்ள ஊடக அறிக்கை வருமாறு..

slcricketers-contract-1-500x752

Related posts: