இந்திய, தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி ஆரம்பம்!

Saturday, January 13th, 2018

இந்திய மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி சென்சூரியன் மைதானத்தில் இன்று ஆரம்பமாகவுள்ளது.தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது.

இந்த நிலையில், இந்திய துடுப்பாட்ட வீரர்கள் வெற்றி வேட்கையுடன் துடுப்பாட வேண்டும் என்று எதிர்பார்ப்பதாக, இந்திய அணியின் தலைவர் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக துடுப்பாடும் போது, சரியான வாய்ப்பு கிடைக்கும் வரும் வரையில் காத்திருக்கக் கூடாது.பந்துவீச்சாளர்களை பதட்டத்துக்கு உள்ளாக்கி, தவறான பந்துகளை வீச செய்யும் வகையில், துடுப்பாட்ட வீரர்கள் நுணுக்கமாக செயற்பட வேண்டும் என்றும் கோலி தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சென்சூரியன் ஆடுகளம் எப்படி செயல்படும் என்று தெரியவில்லை என்று தென்னாபிரிக்கா அணித் தலைவர் டு பிளிசிஸ் கூறியுள்ளார்.இது சிறந்த ஆடுகளமாக இருக்கும் என்று தாம் எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts: