இந்திய அணியின் வீரருக்கு காய்ச்சல்!

Monday, July 24th, 2017

இந்திய கிரிக்கெட் வீரர் லோகேஷ் ராகுல், கடும் சுகயீனம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளார்.அதன்காரணமாக, காலியில் நாளை மறுநாள் ஆரம்பமாகும் இந்திய – இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டில் விளையாடும் வாய்ப்பை தவறவிட்டுள்ளார்.

இந்திய அணியின் வளர்ந்து வரும் வீரராக லோகேஷ் ராகுல் உள்ளார்.அவுஸ்திரேலியாவுக்கு எதிராக நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் நடைபெற்றபோது, முதல் டெஸ்ட் போட்டியில்; விளையாடிய லோகேஷ் ராகுலுக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது.காயத்துடனே அடுத்த மூன்று போட்டிகளிலும் விளையாடினார்.காயத்துடன் விளையாடினாலும் 7 இன்னிங்சில் 6-ல் அரைசதம் அடித்து அசத்தினார்.இந்த தொடருக்குப்பின் இலண்டன் சென்று தோள்பட்டை காயத்திற்காக அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.அறுவை சிகிச்சை செய்து கொண்டதால், ஐ.பி.எல்., சம்பியன்ஸ் டிராபி மற்றும் மேற்கிந்திய அணியுடனான தொடரில் இருந்து விலகியிருந்தார்.தற்போது காயம் குணமடைந்துள்ளதால் இலங்கைக்கு எதிரான தொடரில் இடம்பிடித்துள்ளார்.இலங்கை கிரிக்கெட் தலைவர் பதினொருவர் அணிக்கெதிரான இரண்டு நாட்கள் கொண்ட பயிற்சி ஆட்டத்தில் 58 பந்தில் 54 ஓட்டங்கள் எடுத்திருந்தார்.இந்நிலையில், சுகயீனம் காரணமாக பாதிக்கப்பட்டு கொழும்புக்கு திரும்பி ஓய்வெடுப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related posts: