இந்திய அணியின் இலக்குக் காப்பாளர் பன்ட் உலக சாதனை!
Tuesday, December 11th, 2018ஓர் ஆட்டத்தில் அதிக பிடியெடுப்புக்களை மேற்கொண்ட இலக்குக் காப்பாளர் என்ற அடைவை நிலைநாட்டினார் இந்திய அணியின் இலக்குக் காப்பாளர் ரிஷாப் பன்ட்.
இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் அடிலெட்டியில் கடந்த ஆறாம் திகதி முதல் நேற்று வரை நடைபெற்ற ஆட்டத்தில் பன்ட் மொத்தம் 11 பிடியெடுப்புக்களை மேற்கொண்டார்.
இதன்மூலம் ஓர் ஆட்டத்தில் அதிக பிடியெடுப்புக்களை மேற்கொண்ட இலக்குக் காப்பாளர்களின் பட்டியலில் ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீரர் ஜேக் ரசல், தென்னாபிரிக்காவின் முன்னாள் வீரர் டி வில்லியர்ஸ் ஆகியோர் ஏற்கனவே 11 பிடியெழுப்புக்களுடன் முதலிடத்தில் இருந்த நிலையில் அவர்களின் அடைவை பன்ட் சமன் செய்தார்.
Related posts:
WADA ஹக்கிங்: மேலும் ஒரு தொகுதி ஆவணங்களும் வெளியீடு!
இலங்கை குழாமில் சுரங்க லக்மால்!
25 பந்துகளில் 20 சிக்சர்கள்: உலக சாதனை படைத்த ஸ்காட்லாந்து கிரிக்கெட் வீரர்!
|
|