இந்தியாவில் மாசடைந்த வளியுடன் 14 நகரங்கள்!

Friday, May 4th, 2018

உலகின் வளி மாசடைந்த முதல் 20 நகரங்களில் இந்தியாவில் உள்ள 14 நகரங்கள் இடம்பெற்றுள்ளன. ஆண்டுதோறும் உலகில் 7 கோடி மக்கள் அசுத்தமான காற்றை சுவாசிப்பதால் உயிரிழப்பதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவிக்கின்றது.

இந்தநிலையில் உலக சுகாதார ஸ்தாபனம் மேற்கொண்ட ஆய்வில் இருந்து வளி மாசடைந்த முதல் 20 நகரங்களில் இந்தியாவில் உள்ள 14 நகரங்கள் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

வளியில் சல்பேட், நைட்ரேட் மற்றும் கார்பன் போன்ற மாசுக்கள் கலப்பதால் மக்களுக்கு இருதய பிரச்சினை, புற்றுநோய் போன்ற நோய்கள் ஏற்படுவதாக  உலக சுகாதார ஸ்தாபனம்குறிப்பிட்டுள்ளது

Related posts: