சர்வதேச மரதன் போட்டியில் இரு இலங்கையர்கள்!
Monday, August 7th, 2017
இங்கிலாந்து, லண்டனில் நடைபெறும் சர்வதேச மெய்வல்லுனர் போட்டியில் இலங்கை சார்பாக இரு போட்டியாளர்கள் பங்கு கொள்கின்றனர்
ஹிருணி விஜயவர்தன மற்றும் இந்திரஜித் குரே ஆகியோர் மரதன் போட்டிகளில் கலந்து கொள்ளவுள்ளனர்இவர்கள் பங்கு கொள்ளும் போட்டிகள் இலங்கை நேரப்படி இன்று பிற்பகல் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது
ஆண்களுக்கான மரதன் போட்டியில் 54 நாடுகளைச் சேர்ந்த 108 போட்டியாளர்கள் பங்கு கொள்ளும் நிலையில், மகளீருக்கான மரதன் ஓட்டப்போட்டியில் 46 நாடுகளைச் சேர்ந்த 96 பேர் பங்கு கொள்கின்றனர்இந்த நிலையில், 39 வயதான இந்திரஜித் குரே ஏழாவது முறையாக சர்வதேச மெய்வல்லுனர் போட்டியில் பங்குகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
7 இடதுகை துடுப்பாட்ட வீரர்களுடன் இங்கிலாந்து அணி!
ஆக்ரோஷத்தை குறைக்க வேண்டிய அவசியமில்லை: அனில் கும்ப்ளே!
மெய்வல்லுனரகளுக்கு விசேட மாதாந்தக் கொடுப்பனவு!
|
|