இந்தியன் ப்ரீமியர் லீக் – சன்ரைசர்ஸ் ஐதராபாத் வெற்றி!.

Tuesday, April 16th, 2024

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 30ஆவது போட்டியில், ரோயல் செலஞ்சேர்ஸ் பெங்களூரு மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் நேற்றையதினம் மோதின.

பெங்களூரு எம். சின்னசாமி மைதானத்தில் இடம்பெறும் இன்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ரோயல் செலஞ்சேர்ஸ் பெங்களூரு அணி களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

இதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 03 விக்கெட்டுக்களை இழந்து 287 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

ஐபிஎல் போட்டிகளில் அணி ஒன்று பெற்றுக்கொண்ட அதிக ஓட்டங்களாக இது பதிவாகியுள்ளது.

ஐதராபாத் அணிசார்பில் அதிகபடியாக டிராவிஸ் ஹெட் 102 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

முன்னதாக, இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 08 ஆவது போட்டியின் மும்பை அணிக்கு எதிராக சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 277 ஓட்டங்களை பெற்றிருந்தது.

இந்த நிலையில், 288 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய ரோயல் செலஞ்சேர்ஸ் பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 07 விக்கெட்டுக்களை இழந்து 262 ஓட்டங்களை பெற்று தோல்வியை தழுவியது. அணிசார்பில் அதிகபடியாக தினேஷ் கார்த்திக் 83 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது

Related posts: