இங்கிலாந்து ரஷ்யா அணிகள் நீக்கப்படும்: ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு பகிரங்க எச்சரிக்கை

Tuesday, June 14th, 2016

ரசிகர்கள் தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டால் இங்கிலாந்து, ரஷ்யா அணிகள் யூரோ கால்பந்து தொடரிலிருந்து நீக்கப்படும் என்று ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

பிரான்ஸில் யூரோ கால்பந்து தொடர் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதை பார்க்க உலகமெங்கும் உள்ள ரசிகர்கள் அங்கு படையெடுத்துள்ளனர்.

இந்த நிலையில் அங்கு சென்றுள்ள இங்கிலாந்து ரசிகர்கள் தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று முன்தினம் இரவு இங்கிலாந்து– ரஷ்யா அணிகளுக்கு இடையிலான பரபரப்பான ஆட்டம் 1–1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.

முன்னதாக மைதானத்திற்கு வெளியே மோதலில் ஈடுப்பட்ட இவ்விரு அணி ரசிகர்கள் மைதானத்திற்கு உள்ளேயும் வன்முறையில் ஈடுபட்டனர்.

இவர்கள் அடிதடியில் ஈடுபட்டதுடன் கேலரின் ஒரு பகுதிக்கு தீ வைத்தனர். ரசிகர்களின் இந்த கலவரத்தால் மைதானமே போர்களமாக காட்சி அளித்தது. இந்த சம்பவத்தில் 35க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

ரசிகர்களின் இந்த அடாவடிதனத்தால் ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு கடும் கோபம்அடைந்ததுள்ளது.

நேற்று அவசர ஆலோசனை நடத்திய கால்பந்து கூட்டமைப்பு, இது போன்று ரசிகர்களின் வன்முறை நீடித்தால் இங்கிலாந்து, ரஷ்ய அணிகள் தகுதி நீக்கம் செய்யப்படும் என்று பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும், அந்த நாட்டு கால்பந்து சங்கம் மீது ஒழுங்கீன நடவடிக்கை எடுப்பது தொடர்பாக விசாரணையை தொடங்கியுள்ள ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு, தங்கள் நாட்டு ரசிகர்களை பொறுப்புடன் நடந்து கொள்ளும்படி அறிவுறுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

625.0.560.320.500.400.194.800.668.160.90 (2)

Related posts: