இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டி: கழற்றிவிடப்படும் இந்தியவீரர்கள்!

Sunday, December 4th, 2016

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து இந்திய அணியின் முன்னணி பந்துவீச்சாளர்கள் அஸ்வின், ஜடேஜா, உமேஷ் யாதவ், முகமது சமி ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி தற்போது 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடர் முடிந்த பிறகு இரு அணிகளும் 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடுகின்றன.

இந்த தொடரில் இருந்து சுழற்பந்து வீச்சாளர்கள் அஸ்வின், ஜடேஜா, வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி, உமேஷ் யாதவ் ஆகியோருக்கு ஓய்வு அளிக்க தேர்வாளர்கள் குழு முடிவு செய்துள்ளது.

இங்கிலாந்து தொடருக்கு பிறகு இந்திய அணி வங்கதேசம், அவுஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்த தொடர்களில் புத்துணர்வுடன் களமிறங்க இவர்களுக்கு ஒருநாள் தொடரில் இருந்து ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

215191-720x480

Related posts: