ஆறுதல் வெற்றிபெற்றது பாகிஸ்தான் !
Monday, September 5th, 2016
இங்கிலாந்து அணிக்கு எதிரான 5-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் 4 விக்கெட் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றி பெற்றுள்ளது.
இங்கிலாந்து- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது ஒருநாள் போட்டி நேற்று கார்டிஃப்பில் நடைபெற்றது.இந்த போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி பந்துவீச முடிவு செய்தது.
இதையடுத்து, முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி அதிரடியாக ஆடத் தொடங்கியது. கடைசியாக 50 ஓவர்கள் முடிவு பெற்ற நிலையில் இங்கிலாந்து அணி 9 விக்கெட்டுகளை இழந்து 302 ஓட்டங்களை பெற்றது.இதில் ஜேசன் ராய் அபாரமாக ஆடி 87 ஓட்டங்களும் (89 பந்து, 8 பவுண்டரி, 2 சிக்ஸர்) பென் ஸ்டோக்ஸ் 75 ஓட்டங்களும் (76 பந்து, 5 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள்) எடுத்தனர்.
தொடர்ந்து களமிறங்கிய பாகிஸ்தான் அணியின் சோயிப் மாலிக் (77 ஓட்டங்கள்), சர்பிராஸ் அகமது (90 ஓட்டங்கள்) ஆகியோர் தங்களது சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தியதால் பாகிஸ்தான் அணி 48.2 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 304 ஓட்டங்கள் எடுத்து கடைசி போட்டியில் தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. இந்நிலையில், இங்கிலாந்து அணி கடந்த 4 போட்டிகளில் வெற்றி பெற்றதையடுத்து 4-1 என்ற புள்ளிகளின் வித்தியாசத்தில் தொடரை கைப்பற்றியுள்ளது.
Related posts:
|
|