அவுஸ்திரேலியா அணியிடம் தோல்வி: காரணம் இலங்கை அணித்தலைவர் திமுத் கருணாரத்ன!

Sunday, June 16th, 2019

உலகக் கோப்பை தொடரில் அவுஸ்திரேலியா அணியிடம் தோல்வி அடைந்ததற்கான காரணத்தை இலங்கை அணித்தலைவர் திமுத் கருணாரத்ன கூறியுள்ளார்.

நேற்று லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்த போட்டியில் இலங்கை அணியை 84 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அவுஸ்திரேலியா அணி வெற்றிப்பெற்றது.

போட்டிக்கு பின்னர் பேட்டியளித்த இலங்கை அணித்தலைவர் திமுத் கருணாரத்ன கூறியதாவது, ஆரம்பத்தில் துடுப்பாடி அவுஸ்திரேலியா அணி சிறப்பாக விளையாடி ஓட்டங்களைக் குவித்தனர்.

அதேபோல, பதிலுக்கு துடுப்பெடுத்தாட களமிறங்கிய நாங்களும் சிறப்பான ஆரம்பத்தைப் பெற்றுக் கொண்டோம்.

இலக்கை எட்ட முடியும் என்று தான் நினைத்தோம். ஆனால், மத்திய வரிசை வீரர்களின் பொறுப்பற்ற ஆட்டம் காரணமாகவும், முக்கியமான தருணங்களில் விக்கெட்டுகளை பறிகொடுத்ததால் தோல்வியை சந்திக்க நேரிட்டது.

அதே சமயம், அவுஸ்திரேலியா பந்து வீச்சாளர்கள் மிக சிறப்பாக பந்து வீசினார்கள். நாங்கள் ஒரு திட்டத்தை வைத்திருக்க வேண்டும், ஆனால் அதை நாங்கள் இந்தப் போட்டியில் செய்யவில்லை. மழையால் நாங்கள் இரண்டு ஆட்டங்களை இழந்தோம். எஞ்சிய போட்டிகளில் குறைந்தது இரண்டு போட்டிகளில் நாங்கள் வெல்ல வேண்டும் என திமுத் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

Related posts: